- ராயபெட்டா மணிக்குண்டு
- சென்னை
- சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ்
- மெட்ரோ
- சென்னை ஒயிட்ஸ் ரோட்
- தின மலர்
சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை பெரு நகர போக்குவரத்து காவல்துறையினரால் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:
* பட்டுலாஸ் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து, ஒயிட்ஸ் சாலை மற்றும் திருவிக சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
* ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை-ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.
* அண்ணாசாலையில் இருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
* அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை மற்றும் திருவிக சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை -ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மெட்ரோ ரயில் பணிக்காக இன்றுமுதல் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே ஒரு வாரம் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.